திர்விதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா.

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் கன்யாகுமாரி ஜில்லா திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் தான் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் அதன் பத்மனாபபுரம் தான் அப்போதய திருவிதாங்கூரின் தலை நகர். இப்பொதும் அங்கு ஒரு கொட்டாரம் ( அரண்மனை) உள்ளது. அது  கேரள அரசின் பாதுகாப்பில் தான் இருக்கிறது.

நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது திரு மார்த்தாண்ட வர்மாவின் சிறு வயது பிராயத்தின் வாழ்கை, எப்படி அவர் இவ்வளவு பெரிய ஒரு ராஜியத்தை நிறுவினார் என்றெல்லாம் படித்தோம். அப்படி படித்ததில் சில ஸ்வாரஸ்யமான நடந்த கதைகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

மார்த்தாண்ட வர்மா மிக சிறு வயதிலேயே அரியணையில் அமர  நேர்ந்தது. அவரை கொன்று அவரிடம் இருந்து நாட்டை பிடித்து எடுக்க இரண்டு குடும்பங்கள் மிகவும் எத்தனித்தன. அவர்கள் 'எட்டு வீட்டு பிள்ளைமார், மாடம்பிமார் என்ற குடும்பங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் நாயர்கள். அப்போதய மன்னரின் படைகளில் நாயர்கள் தான் அதிகம் இருந்தனர். ஆகையால் இவர்கள் கை எப்போதும் ஓங்கி இருந்தது.

சிறு பிராயத்தில் இருந்த மார்த்தாண்ட வர்மாவை கொன்று அவர்கள் அரசை பிடுங்கி நாட்டை கைபற்றலாம் என்றெண்ணி அவர்கள் சிறு குழந்தையான மார்த்தாண்டனை கொல்ல பிரயத்தனம் செய்தனர்.

ஒரு முறை மார்த்தாண்டன் ஒரு கோவிலுக்கு ஸ்வாமி கும்பிட போனார். இதை அறிந்த எதிரிகள் படைகளாக வந்து கோவிலை சுற்றி வளைத்துக்கொண்டனர். செய்வதறியாது திகைத்து போன மார்த்தாணடனை அங்கிருந்த தலைமை பூஜாரி அழைத்து பின்வறுமாறு கூறினார். ( அவர்களை  'போற்றி' என்றழைப்பர். இவர்கள் உடுப்பியில் இருந்து வந்த பிறாமணர்கள். திருவிதாங்கூர் கோவில்களில் இவர்கள் தான் பூஜை புனஸ்காரங்கள் செய்து வந்தனர்).

" திருமேனி ஒரு காரியம் செய்யணம், இப்போழ் அத்தேகம் புறத்து போயால் அவன்மாறு அத்தேகத்தை கொன்னு களையும். அது கொண்டு அத்தேகம் என்ற தோர்த்து உடுத்து உருளி தலையில் கவிழ்த்து புறத்து போயால், எல்லாரும்  ஞான் ஆணு போகுன்னு என்னு விஸ்வசிச்சு அந்தேகத்தே  விட்டு களையும், ஞான் அகத்திருக்காம்" என்றார்.

அரசரை திருமேனி என்றழைப்பர்." அரசே நீங்கள் இப்போது வெளியே போனால் உங்கள் விரொதிகள் உங்களை கொன்று விடுவர். ஆகையால் நீங்கள் என்னுடைய  (தோர்த்து = இடுப்பில் கட்டும் ஓரிழை துண்டு ) தோர்த்தை கட்டிக்கொண்டு உருளியை (உருளி= பெரிய வெங்கல பாத்திரம், அகலமாக இருக்கும். பாயசம், சர்கரை பொங்கல் இவை செய்ய உபயோகிப்பது) தலையில் மாட்டிகொண்டு போனால் யாருக்கும் நீங்கள் போவது தெரியாது.  நான் தான் போகிறேன் என்று விட்டு விடுவார்கள் நான் உள்ளே இருக்கிறேன்" என்றார். .

வேறு வழியின்றி மார்த்தாண்டனும் அப்படியே செய்து வெளியில் வர அவரின் விரோதிகள் அவரை பூஜாரி என்று நினைத்து  விட்டு விட்டனர். வெகு நேரம ஆகியும் மார்த்தாண்டன் வராததால்  என்ன செய்வது என்றிருக்கும்போது பூஜாரி மன்னரின் உடையில் வெளியே வர , அவரை மார்த்தாண்டன் என்று நினைத்து அவரை கொன்று விட்டனர்.

இதே போல் வேறொறு  முறை மார்த்தாண்டன் தனியாக வரும்போது அவர் விரோதிகள் அவரை துரத்தி வந்தனர். அவர் ஒரு பெரிய பலா மரத்தை வழியில் கண்டார். அதில் ஒரு பெரிய பொந்து இருந்தது. அதில் ஏறி அவர் ஒளிந்து கொண்டார். அவரைக்காணாமல் அவரின் எதிரிகள் ஏமாந்து போனார்கள்.

அப்போது நான் படிக்கும் காலத்தில் அந்த பலா மரம் இருந்ததாக சொல்வார்கள். அதை 'அம்மச்சி பலா' என்று அழைப்பார்கள். அம்மச்சி என்றால் மலயாளத்தில் பாட்டி. தன் தாய் குழந்தையை வயிற்றில் வைத்து காப்பாற்றியதை போல அந்த மரம் காப்பாற்றியதால் இப்படி அழைக்கபட்டது.

இப்படி பல இடையூருகளை கடந்து பெரிய ராஜியத்தை நிறுவிய மார்த்தாண்ட வர்மா, திருவனந்தபுரத்தை தன் தலை நகர் ஆக்கிகொண்டு  தன் ராஜியத்தை ஸ்ரீ.அனந்த பத்மனாபனுக்கு தாரை வார்த்துகொடுத்துவிட்டு அந்த ஒற்றை கல் மண்டபத்தில் நமஸ்காரம் செய்து தன்னையும் தன் வம்ஸாவளியினரையும் 'பத்மனாப தாசர்களாக' செய்து விட்டார். இப்படி செய்ததன் மூலம் வேறு எந்த குடும்பத்தாரும் அரசை பிடுங்க முடியாது செய்து விட்டார்.

இதனால் திருவிதாங்கூரை ஆண்டவர் ஸ்ரீ பத்மனாப ஸ்வாமி தான். அவரின் தாசர்கள் தான் அவருக்காக அரியணை ஏறி ஆண்டனர். இதனால் தான் அங்கு  நல்லாட்சி நடந்தது, இந்தியாவில் சேரும் வரை.

Comments