தமிழ் நாட்டில் தமிழர்கள்



தமிழ் நாட்டில் மற்ற எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு சிறப்பு உண்டு. இங்கு தான் தமிழர்கள் மிக குறைவாக இருக்கிறார்கள் மற்ற மொழி பேசுபவர்களை விட. சுமார் 42% தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள்.தான் தமிழ் நாட்டில் உள்ளனர்.  அதாவது தங்கள் சொந்த மானிலத்திலேயே அவர்கள் Minority. 

பலர் தமிழ் பேசினாலும் அதை மொழியாக கொண்டவர்கள் மிக குறைவு. தமிழ் நாட்டில் பல தெலுங்கு, மராட்டி மற்ற  மொழி பேசுபவர்கள் போருக்கு வந்ததாலும், பின்னர் இங்கேயே தங்கி விட்டதாலும் இது நேர்ந்தது. பல சண்டைகள் நடந்ததால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம்.

இங்கு தமிழர்களுக்கு அடுத்தபடி தெலுங்கர்கள் உள்ளனர். இவர்கள் சென்னையில் இருந்து கன்யாகுமாரி வரை பல ஜாதி பிரிவுகளாக பல்கி பரவி உள்ளனர். நாயுடு, ரெட்டியார், ராஜு, நாயக்கர், (வன்னியர்களும் தங்களை நாயக்கர் என்று சொல்லிக் கொள்ளுவது உண்டு ஆனால் அவர்கள் தமிழர்கள்), ஆதி திராவிடர், சக்கிலியர், தெலுங்கு வண்ணார்கள், ராவ் (பிராமணர்கள்), கோமுட்டி செட்டி, வளையல் செட்டி  என பல பிரிவுகள்.

மலயாளிகளும் ஏராளமாக உள்ளனர். கன்னடர்களா, மலயாளிகளா இரெண்டாவது இடம் என தெரியவில்லை. பலரும் சரியான Data கொடுப்பதில்லை.

சௌரஷ்டிரர்கள் (குஜராத்திகள்), மராட்டிகள், வட நாட்டுகாரகள் இவர்களும் நல்ல சதவிகிதத்தில் இங்கு இருக்கிறார்கள். பல போர்கள் இங்கு நடந்ததால் விஜய நகர ராஜாக்கள், தெலுங்கு மன்னர்கள், சிவாஜியின் வழி தென்றல்கள் (தஞ்சவூர்  சரபோஜி மன்னர்கள்), வீரபாண்டிய கட்டபொம்மன், திப்பு சுல்தான், ஆர்காட்டு நவாப், ஆங்கில, ஃபிரன்ச், டச் போன்ற பிற மொழி மன்னர்களின் ஆக்கிரமிப்புகளால் அவர்கள் இங்கு வந்து தங்கி விட்டனர். இதனால் தான் தமிழர்கள் இங்கு மிக குறைவு. சோழ, பாண்டிய மன்னர்கள் பலரை இங்கு கொண்டு வந்து குடி அமர்த்தினர். தவிர பல போர்களில் சிறை பிடிக்கபட்ட்வர்கள் பலர் இங்கே தங்கி விட்டனர்.

அப்படியானால் தமிழர்கள் எங்கு போனார்கள்? எனக்கு தெரிந்து கேரள மலயாளிகள் தான் தமிழர்களாக இருக்க வேண்டும் என தோன்றுகிரது. அவர்கள் கிட்டதட்ட தமிழை ஒத்த மொழி பேசுகிறார்கள்.ஏராளமான நல்ல, தூய்மையான தமிழ் சொற்கள் மலயாளத்தில் உண்டு. மலையாளி என்றால் மலையை ஆள்பவன் என்ற பொருள் உண்டு. அவர்கள் சுத்த தமிழை நல்ல உச்சரிப்புடன் பேசுகிறார்கள். மலயாளத்தில் சுத்த தமிழ் வார்த்தைகள் ஏராளமாக உண்டு. அதை அப்படியே வழக்கு மொழியாக பேசுகிறார்கள்.
(படிஞ்சாறு படியும் ஞாயறு- மேற்கு), புலர்ச்சை, வைகும், பைதல், பொன்வாணிபக்கடை, சந்தை, வெள்ளம், நீர்,அங்காடி, விழி, இல்லம், என பல சொற்கள்) .அவர்களுக்கு சுய மரியாதையும் உண்டு. என்ன பிரச்சனை என்றால் அவர்களுக்கு இங்குள்ள தமிழர்களை பிடிக்காது. சமஸ்கிருதம் கலந்த தமிழை உபயோகிக்கிறார்கள்.

இல்லை இங்கிருந்த தமிழர்கள் பூம்புகார், கடல் மல்லை (மஹாபலிபுரம்) இவற்றில் நிகழ்ந்த சுனாமி போன்ற இயற்கை இடர்பாடுகளில் சிக்கி மறித்தனரா? Tsunami  இல் கடலால் கொண்டு போகப்பட்டனரா? ஏனென்றால் சோழ ஆட்சியில் ராஜ ராஜ சோழனும் அவன் மகனும் மிக பெரிய சாம் ராஜியத்தை நிறுவினர். இப்போதய ஸ்ரீலங்கா, ஆந்திரா, கர்னாடகா, மலேசியா,கம்போடியா, இந்தோனெசிய என்று பல நாடுகளில் கப்பல் படையை அனுப்பி நட்பும் வணிகமும் செய்தனர். அப்படி பல்கி பெருகி இருந்த தமிழர்கள் ஏன் இப்படி கூனி குறுகி, நலிந்து மற்றவர் ஆட்சியில் இருக்கிறார்கள் என்று புரியவில்லை. இப்போதும் பாலி தீவில் ஏராளமான ஹிந்துக்கள் உள்ளனர். அவர்களும் தாய்லந்துகாரர்களும் ராமாயண நாட்டியங்கள் ஆடுவது உண்டு. கம்போடியாவில் ஒரு தமிழ் மன்னன் கட்டிய மிக பிரம்மாண்டமான் சிவன் கோவில் இப்பொதும் உள்ளது. இது கம்போடிய-தாய்லந்தின் பிரச்கனையாக இப்போதும் உள்ளது.

ஈழத்தமிழர்களும் கேரள மலையாளிகளும் பேசுவது ஒரே போல இருக்கும். பலமுறை இதை நான் கவனித்துஇருக்கிறேன். ஆனால் ஈழ தமிழர்கள் ‘ழ என்ற எழுத்தை “ள என்று உச்சரிக்கிறார்கள். இது பல நாடுகளில் இருக்கும் தமிழர்களும் இப்படியே உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டு தமிழர்களே இப்படி உச்சரிக்கும் போது மற்றவர்களை குறை கூற என்ன இருக்கிறது. ஆனால் இன்று தமிழ் இவ்வளவு தூரம் INTERNET, மற்ற இணையங்கள், வலை தளங்களில் இருக்க, பெருக  இந்த ஈழத்தமிழர்கள் தான் காரணம். அவர்கள் பல நாடுகளில் போய் தமிழை வாழ வைத்து உயிர் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு தமிழில் பேச, எழுத வெட்கமாக இருக்கிறது. தன் தாய் மொழியை மறந்தவன் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை. ஆங்கிலம் எவ்வளவு தான் கை கொடுக்கும்?

தமிழ் நாட்டில் தான் தமிழர் அல்லாதவர் முதல் மந்திரியாக இருந்திருக்கிறார்கள். கீழ்கண்ட பட்டியலை பார்த்தால் இது புரியும்.

Chief Ministers of Tamil Nadu since 1920

1.
Thiru A Subbarayalu
17-12-1920 to 11-07-1921
2.
Thiru Panagal Raja
11-07-1921 to 03-12-1926
3.
Dr. P Subbarayan
04-12-1926 to 27-10-1930
4.
Thiru P Munuswamy Naidu
27-10-1930 to 04-11-1932
5.
Thiru Ramakrishna Ranga Rao,
Raja of Bobbili
05-11-1932 to 04-04-1936
6.
Thiru P T Rajan
04-04-1936 to 24-08-1936
7.
Thiru Ramakrishna Ranga Rao,
Raja of Bobbili
24-08-1936 to 01-04-1937
8.
Thiru Kurma Venkata Reddy Naidu
01-04-1937 to 14-07-1937
9.
Thiru C Rajagopalachari
14-07-1937 to 29-10-1939
10.
Thiru Tanguturi Prakasam
30-04-1946 to 23-03-1947
11.
Thiru O P Ramaswamy Reddiyar
23-03-1947  to 06-04-1949
12.
Thiru P S  Kumaraswamy Raja
06-04-1949  to 09-04-1952
13.
Thiru C  Rajagopalachari
10-04-1952  to 13-04-1954
14.
Thiru K Kamaraj
13-04-1954  to 02-10-1963
15.
Thiru M Bakthavatsalam
02-10-1963  to 06-03-1967
16.
Dr. C.N. Annadurai
06-03-1967  to 03-02-1969
17.
Dr. Kalaignar M Karunanidhi
10-02-1969 to  04-01-1971
15-03-1971 to  31-01-1976
18.
Dr. M G Ramachandran
30-06-1977 to 17-02-1980
09-06-1980 to  15-11-1984
10-02-1985 to 24-12-1987
19.
Thirumathi Janaki Ramachandran
07-01-1988 to  30-01-1988
20.
Dr. Kalaignar M Karunanidhi
27-01-1989 to 30-01-1991
21.
Dr. Selvi J Jayalalithaa
24-06-1991 to 12-05-1996
22.
Dr. Kalaignar M Karunanidhi
13-05-1996 to  13-05-2001
23.
Dr. Selvi J Jayalalithaa
14-05-2001 to  21-09-2001
24.
Thiru O. Panneerselvam
21-09-2001 to  01-03-2002
 25.
 Dr. Selvi J Jayalalithaa
 02-03-2002 to  12-05-2006
26.
Dr. Kalaignar M. Karunanidhi
13-05-2006 to 15-05-2011
26.
 Dr. Selvi J Jayalalithaa
16-05-2011 onwards

இந்த வெறும் 9 பேர்கள் தான் தமிழர்கள் கருணானிதி, ஜயலலிதாவையும் சேர்த்து. சுப்பராயன், பி.டி.ராஜன், ராஜாஜி,காமராஜ், பக்தவத்சலம், அண்ணாதுரை, கருணானிதி, ஜயலலிதா, ஓ. பன்னீர்செல்வம். மற்றவர்கள் யாரும் தமிழர் இல்லை.
இந்த தமிழர்கள் எங்கு போனார்கள்?

Comments